ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியில் லொறியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹற்றன் ஸ்டெதன் தோட்ட பகுதியிலேயே இன்று அதிகாலை 3.15 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
தலவாக்கலையிலிருந்து கண்டி நோக்கி முச்சக்கர வண்டியை ஏற்றிசென்ற லொறியே இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
எனினும் லொறியில் சென்ற மூவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சாரதிக்கு நித்திரை வந்தமையே விபத்துக்காண காரணம் என பொலிஸ் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.