ஹற்றன் பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறி விபத்து..!

151

 

மஹியாங்கனை பகுதியிலிருந்து ஹற்றன் பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்றையதினம் (28.03.2018) அதிகாலை நேர்ந்துள்ளதாக திம்புள்ள – பத்தனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா – ஹற்றன் பிரதான வீதியில் பத்தனை சந்தியில் பயணித்த லொறி வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹற்றன் பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறி விபத்து!

இந்த நிலையில் லொறியின் சாரதி லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முயன்றபோதும் கட்டுப்பாட்டுக்கு அப்பால் லொறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், எனினும் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE