ஹற்றன் மூங்கில் தோப்பில் தீ விபத்து – போக்குவரத்து பாதிப்பு

296

ஹற்றன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள மூங்கில் தோப்பிற்கு, இன்று காலை இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூங்கில் தோப்பு தீயினால் எரிந்து பிரதான வீதியில் விழுந்ததன் காரணமாக அவ் வீதியினூடான போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டிருந்ததாக, ஹற்றன் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

எனினும் பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து இந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதன் பிறகு போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

இந்த தீ விபத்தினால் அந்த பகுதியில் அமைந்துள்ள தொலைபேசி கம்பத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

SHARE