ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள கோவ்லூன் நகரில் நடந்து வருகிறது.
இந்நிலையில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவிம் தென்கொரியாவின் சங் ஜி ஹூயனும் விளையாடி வந்தனர்.
இதில் 24-26, 20-22 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் சங் ஜி ஹூயனிடம் தோற்று வெளியேறினார்.
பி.வி.சிந்து சங் ஜி ஹூயனிடம் தோற்பது இது 6-வது முறை என்று குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 18-21, 30-29, 21-18 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரர் பிரனாயை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.
மேலும் காயம் காரணமாக சீனாவின் சென் லாங்கை போட்டியில் இருந்து விலகியதால் இந்திய வீரர் சமீர் வர்மா,வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கால் இறுதிக்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்