அனுராதபுரம், இபலோகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின்போது இபலோகம பகுதியைச் சேர்ந்த 20, 21 மற்றும் 25 வயதுடைய நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை கெகிராவ நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.