அன்றாட வாழ்க்கையினை மிகவும் சுறுசுறுப்போடும், சந்தோஷமாகவும் வாழ வேண்டுமெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள 20 வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
20 வழிமுறைகள்
- அன்றாட வேலைகளைப் பட்டியலிட்டு நேரம் ஒதுக்குங்கள்
- எந்த விடயத்தையும் நேர்மறையாக எண்ணுங்கள்
- அதிகாலையில் 5 – 6 மணிக்கெல்லாம் விழித்திடுங்கள்
- தினமும் குறைந்தது ஆறு கிளாஸ் தண்ணீர் அருந்துங்கள்
- காலை உணவைத் தவிர்க்க வேண்டாம். சரியான நேரத்துக்குச் சாப்பிடுங்கள்
- கீரை, காய்கறிகள், பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்.
- ஆரோக்கியமான நொறுக்குத்தீனி சாப்பிடுங்கள்
- உடற்பயிற்சி செய்யத் தவறாதீர்கள்
- யோகா முறைப்படி பயின்று, வீட்டிலேயே தினசரி முயற்சி செய்யுங்கள்.
- தினமும் புத்தகம் வாசிப்புக்கு அரை மணி நேரத்தை ஒதுக்குங்கள்
- பலவீனங்களைக் கண்டு பயப்படாதீர்கள்
- அலுவலகம், வீடு தாண்டி பயணம் செய்து இயற்கையை நேசியுங்கள்
- குறுகியகால மற்றும் நீண்டகால இலக்குகளை நிர்ணயித்துச் செயல்படுங்கள்
- உங்களை மகிழ்ச்சியாக்கும் விடயங்களை செய்யத் தவறாதீர்கள்.
- தோல்விகளைக் கண்டு அஞ்ச வேண்டாம்.
- முடியாது, இல்லை ஆகிய வார்த்தைகளைத் தேவைப்படும் இடங்களில் கண்டிப்பாக உபயோகியுங்கள். வேலைப்பளுவை ஏற்றிக்கொள்ளாதீர்கள்
- கனவுகளை விட்டுக்கொடுக்காதீர்
- தினமும் புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.
- இரவு 11 மணிக்கு மேல் விழித்திருப்பதைத் தவிர்த்திடுங்கள்.
- ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு மணி நேரம் தூங்கி உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு அளியுங்கள்.