ஹோல்டருக்கு ’நோ’ சொன்ன கிரிக்கெட் வாரியம் – அதிரடிக்கு தயாரான திசர பெரேரா

360
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜாசன் ஹோல்டர் விலகியுள்ளார்.பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் முதல் சீசன் பெப்ரவரி 4ம் திகதி தொடங்கி பெப்ரவரி 23ம் திகதி வரை நடக்கிறது.

இதில் கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாட மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் ஹோல்டர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் விளையாட அவருக்கு அனுமதி மறுத்து விட்டது. இதனால் அவர் அந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அனுமதி கொடுக்காததால் அவரால் இந்த தொடரில் விளையாட முடியவில்லை.

மேற்கிந்திய தீவுகள் அணியை வலுப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருவதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கிளாடியேட்டர்ஸ் அணிக்காக மாற்று வீரர் இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஜாசன் ஹோல்டர் விலகியதை தொடர்ந்து இலங்கை அணியின் சகலதுறை வீரரான திசர பெரேரா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

SHARE