தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி தோட்ட தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆர்ப்பாட்டம் இன்று 09வது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டது
அந்தவகையில் நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை மேற்பிரிவு கீழ் பிரிவு ஆகிய தோட்ட தொழிலாளர்கள் சாஞ்சிமலை பஸ் நிலையத்திற்கு முன்பாக டயர்களை ஏரித்தும் செதுர் தேங்காய் உடைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டதோடு நாங்கள் கடந்த 09 நாட்களாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தோம் ஆனால் இன்று காலை திடீரென இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் பணிக்கு தொழிலாளர்களைத் திரும்பும் மாறும் எதிர் வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதியோடு கலந்துரையாட இருப்பதாக இன்று அறிக்கை விடுகிறார்.
எனவே இவ்வளவு நாட்களாக ஜனாதிபதியை ஆறுமுகன் தொண்டமானுக்கு தெரியவில்லையா? இன்று ஒட்டு மொத்த தோட்ட தொழிலாளர்களையும் ஆறுமுகன் தொண்டமான் காட்டி கொடுத்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்
எது எவ்வாறாக இருப்பினும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆறுமுகன் தொண்டமான் கூறியவாறு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுத்தே ஆகவேண்டும் எனவும் இம்மக்கள் கோரிக்கை விடுத்தனர்
இதேவேளை 09 வது நாளாகவும் பெரும்பாலான தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லாமல் பனிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது இவ்வாறு இருக்க பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கிழ்பிரிவு மத்தியபிரிவு ஆகியே தோட்ட தொழிலாளர்கள் இன்றைய தினம் பணிக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.