மீண்டும் விஜய்யுடன் இணையும் அமலாபால்?

227

காதல் திருமணம் செய்து கொண்ட இயக்குநர் விஜய்யும், நடிகை அமலாபாலும் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்கின்றனர்.

சிறு வயதில் நான் செய்த தவறுதான் திருமணம், காதல் திருமணம் செய்துகொண்ட எங்களது திருமண வாழ்க்கை மனம் ஒத்துப்போகவில்லை, இதனால் நாங்கள் இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்க ஆரம்பித்துவிட்டாம் என அமலா பால் விளக்கம் அளித்தார்.

மேலும், இவர்கள் இருவரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை அமலா பாலிடம் நீங்கள் மீண்டும் இயக்குநர் விஜய்யுடன் ஒன்று சேர்வீர்களா? என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த அவர், நாங்கள் மீண்டும் இணைவது பற்றி எனக்கு தெரியாது. வாழ்வில் நடப்பவற்றை எல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்க இயலாது. மேலும் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை.

வாழ்க்கையில் நடக்கும் சில தருணங்கள் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஒரு வேளை நானும், விஜய்யும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்துக்கொண்டால் எங்கள் இருவருக்கும் சந்தோஷமான தருணமாகத்தான் இருக்கும்.

ஆனால், தற்போது நாங்கள் இருவரும் வெவ்வேறு பாதையில் உள்ளோம் என்று கூறியுள்ளார்.

SHARE