
தனது 110வது பிறந்தநாளை தனது மனைவி 101வயது ஆனந்தாயி மற்றும் குடும்பத்துடன் கொண்டாடினார் இந்த ஸ்ட்ராங் தாத்தா வெங்கடேசன். பேரன், பேத்திகளுடன் தனது 111வது பிறந்தநாளை ஏழைகளுக்கு அன்னைதானம் வழங்கியும், கேக் வெட்டியும் கொண்டாடினர். உறவினர்கள், வெங்கடேசன் தம்பதியினரி டம் ஆசிகள் பெற்று அமர்க்களமாக நடந்தேறியது அவரது பிறந்தநாள்.
இது குறித்து பேசிய அவரது மகன் பாண்டியன், “எங்க அப்பாவோட 110வது பிறந்தநாளை நாங்க சிறப்பாக கொண்டாடி வருகிறோம். எங்க அம்மா அப்பா இவ்வளவு வயசு வரைக்கும் இருக்கறது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாவும், ரொம்ப பெருமையாவும் இருக்கு. 6 மகன்கள், 2 மகள்கள்னு நாங்க மொத்தம் 8 பேர்.
நாங்க எல்லோரும் சேர்ந்து எங்க அப்பாவுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறோம். இது எல்லாருக்கும் கிடைத்திடாத வாய்ப்பு. அப்பா – அம்மாவின் இந்த சாதனைக்கு காரணம் விவசாயம். இவர் ஒரு விவசாயி, அப்பாவுக்கு மது, சிகரெட் னு எந்த கெட்டபழக்கமும் கிடையாது
இயற்கை உணவுகள், கூழ், கஞ்சி, பழங்கள், போன்ற ஆரோக்கியமான உணவுகள் சாப்பிட்டதும்தான் இவ் வளவு வயது வரை வாழ முடிந்தது. எங்க அப்பா – அம்மா சார்பாக கடவுளுக்கு நாங்க நன்றி சொல்லணும்” என்று உணர்ச்சிவயப்பட்டார்.