நன்நீர் மீன்பிடித்துறையை ஊக்குவிக்கும் வகையிலும் சூழல் சுத்தத்தை பேனிப் பாதுகாக்கும் வகையிலும் மீன்பிடி உபகரணங்களும், குப்பைத்தொட்டில்களும் மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் கடந்த 28.09.2016 அன்று வழங்கிவைத்தார்.
மத்திய மாகாண நன்நீர் மீன்பிடி விவசாய மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ரூபாய் 12 லட்சம் நிதியொதுக்கீட்டில் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களைச் சேர்ந்த 60 பயனாளிகளுக்கு குப்பைத்தொட்டிலும், 17 பயனாளிகளுக்கு மீன்பிடி உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள், மாகாணசபை உறுப்பினர் சிவஞானம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தகவலும் படங்களும்:-
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்