மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்த நோண்பு திறக்கும் நிகழ்வு நேற்று அவரது கொழும்பு வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
பேருக்கு மட்டும் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்த போதிலும் சுமார் 750 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர்.அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்,எம்.பௌஸி, ஹிஸ்புள்ளாஹ் , முன்னாள் அமைச்சர் அதாவுள்ளா உட்பட இன்னும் பல முஸ்லிம் அரசியல்வாதிகளும் பங்கு கொண்டிருந்தனர்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அவரது துனைவியார் மற்றும் அவரது புதல்வர் நாமல் எம்பி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர் இfப்தார் நிகழ்வின் பிரதான ; முகா தலைவரின் வருகையாகும். இfப்தார் நிறைவடைந்ததன் பின்னர் மஹிந்த , அவரது வரவேற்பரைக்கு செல்லவே அவரை சந்தித்து உரையாட நீண்ட வரிசையில் அங்கு கலந்துகொண்டோர் காத்து நின்றனர்.
அவர்களுள் ரவூப் ஹக்கீமும் ஒருவர்.பின்னர் ஹக்கீமை கண்ட மஹிந்த – ஹக்கீம் எமத்திதுமா, கோமத என சுகம் விசாரித்து அவரது கையை பற்றிய மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களின் எதிரியாக என்னை விளம்பரப்படுத்தினீர்கள்.இப்போது இந்த ஆட்சியில் என்ன நடக்கிறது எனக் கேட்ட போது ஹக்கீம் எதுவுமே கூறாமல் புன்முறுவல் பூத்தார். இfப்தாருக்கு ஹக்கீம் வருகை தந்ததை அவதானித்த சிலர், வேறு வழியின்றி மைத்திரிக்கு ஆதரவளிக்கப் போகின்றேன். அமைச்சர் ரிஷாத் மைத்திரிக்கு ஆதரவளித்து விட்டார்.அதனால் நானும் போகின்றேன் என்று மஹிந்தவுக்கு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டுத்தானே போனார். அதனால் இவரது வருகை ஆச்சரியப்படுவதற்குரிய விடயமல்லவே என்று கூறியதையும் அவதானிக்க முடிந்தது. புரவலர் ஹாஷிம் ஒமர் இதன் பின்னர் அங்கு நின்ற ஊடகவியலாளருடன் உரையாடிய புரவலர் ஹாஷிம் ஒமர் அவர்கள் , இfப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட சனத்திரளை அவதானித்து விட்டு ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி என்றார்.