வவுனியா
20 நாட்கள் மட்டும் வழங்கப்படம் கொடுப்பனவுகளுக்காக சமூகத்தை
காட்டிக்கொடுத்துவிடாதீர்கள் என வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுர்தீன்
தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று (31.7) இடம்பெற்ற ஐக்கய தேசிய முன்னணியின் தேர்தல்
பிரசார கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
மைத்திரி ஜனாதிபதியாக வந்த பின்னர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக வந்து
100 நாட்கள் நல்லாட்சி புரிந்து பல அபிவிருத்திகளை மேற்கொண்டார்கள் என
தெரிவித்த அமைச்சர் ரிசாட் பதியுதீன் அந்தப்பொழுதுகளில் பயமில்லாமல் மத
நடவடிக்கைகளில் ஈடுபட்டோம், பயமில்லாமல் வியாபராம் செய்ய முடியும்,
பயமில்லாமல் எதையும் தொலைபேசியிலோ நேரடியாகவோ ஊடகத்திலோ கதைக்க
முடியுமாக இருந்தது அந்த அளவிற்கு நிம்மதியாக சுதந்திரமான ஆட்சியை
பெற்றிருந்தோம் என தெரிவித்த ரிசாட் பதியுதீன்
ரணில் ஒரு புத்திசாலி. இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்ற 225 போரில்
ஆற்றலுள்ள திறமையான நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்லக்கூடிய
விவசாய புரட்சி ஏற்படுத்தி மீன்பிடித்தொழிலில் புரட்சி ஏற்படுத்தி இன்று
ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்துள்ள ஜி.எஸ்.பி. பிளஸ்ஸை பெற்றுத்தந்து
அபிவிருத்தி செய்யகூடியவர் அதன் மூலம் இந்த நாடு அமெரிக்காவைபோலு
சிங்கப்பூரை போல ஐரோப்பிய ஒன்றியத்தைப்போல நல்ல நாடாக
மாற்றக்கூடிய வல்லமை ரணிலுக்கே உள்ளது என குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்த வெளியிட்ட அமைச்சர் ரிசாட் பதியுதீன் இந்த நிலையில்
மீண்டும் மகிந்த ராஜபக்சவை கொண்டு வந்துவிடக்கூடாது. அற்பசொற்ப லாபத்திற்காக
தன்னுடைய வியாபரத்தை அதிகரிப்பதற்காக அதனூடாக இன்னும் பணத்தை தேடுவதற்காக இந்த
சமூகத்தை இந்த மார்க்கத்தை பள்ளிகளை பெண்களின் ஆடைகளை எமது எதிர்காலத்தை நாம்
இதயமாக நினைத்திருக்கின்ற மதத்தை காட்டிக்கொடுக்கும் கூட்டம் இன்று ஊர் ஊராக
போய் வெட்கமின்றி பணம் கொடுத்து அரசியல் செய்கின்றார்கள். எனவே அற்ப
சொற்ப லாபத்திற்காகவும் 20 நாட்கள் தரப்படும் கொடுப்பனவுகளுக்காகவும்
சமூகத்தை காட்டிக்கொடுத்து விடாதீர்கள் என தெரிவித்த வணிப கைத்தொழில் அமைச்சர்
ரிசாட் பதியுதீன்
தமிழ் சகோதரர்களே நீங்கள் 30 வருடங்களாக பட்ட கஸ்டங்களை நீக்கி விடிவு
காணக்கூடிய நிரந்தர சமாதானத்தை நாம் கண்டிருக்கின்றோம். எனவே இந்த நிரந்தர
சமாதானம் நீடித்து நிலைக்க கூடிய பயமற்ற தலைவர் ரணில் விக்கரமசிங்கவே உன்பதை
அறிந்துகொள்ளுங்கள்.
ஆகவே எந்தவித பேதமும் இல்லாமல் நல்லாட்சி இன்றும் 60 மாதங்கள் இந்த நாட்டில்
வரவேண்டும். சுதந்திரம் கிடைத்ததில் இருந்து யுத்தம் யுத்தம் பிரச்சனை பிரச்சனை இந்த
நிலையில் உலகத்தை அறிந்த பல தலைவர்களை தெரிந்த நல்லதொரு தலைவர் வேட்பாளராக
உள்ளார் எனவே அவர் தலைமையிலான கட்சியை வெற்றி பெற சேய்யவேண்டும்.
இந் நிலையில் மீண்டும் ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வர மன்னாரிலும் இங்கும்
பலர் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். எனவே மக்கள் இவ்வறானவர்கள்
தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.