2000, 5000 நாணய தாள்களின் பின்னணியில் ராஜபக்ஷர்களின் சதியா?

226

5000_ci-copy

கடந்த ஆட்சி பல்வேறு நிதி மோசடிகள் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அது ஆயிரம் இரண்டாம் அல்ல. பல ஆயிரம் பில்லியன் டொலர்களை தாண்டிச் செல்கிறது.

இவ்வாறான பெருந்தொகை பணத்தை பரிமாற்றிக் கொள்ள எவ்வாறான நாணயம் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது கேள்விக்குறியாகும்.

அந்த வகையில் கடந்த அரசாங்கத்தின் போது புதிய வகை நாணயத்தாள்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

2000 மற்றும் 5000 நாணயத் தாள்கள் இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதன்மூலம் இலங்கையின் நாணயத்தின் பெறுமதி வலுவிழந்து போனது.

ஒரு நாடொன்றின் பண புழக்கத்தை அடிப்படையாக வைத்தே அந்நாட்டின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைய அளவிட்டுக் கொள்ள முடியும்.

இதனடிப்படையில் கடந்த ஆட்சியின் போது ஏன் அதிகளவான பெறுமதி கொண்ட நாணய தாள்கள் அச்சிடப்பட்டன என பொருளியலாளர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

ராஜபக்ஷ ரெஜிமென்ட் உறுப்பினர்கள் தமது கறுப்பு பணத்தை கைமாற்றிக் கொள்ளும் வகையில் இந்த நாணயத்தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டதாக ஆய்வாளர்களினால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட ஒவ்வொரு வர்த்தக நடவடிக்கையின் போதும், அந்த நிறுவனத்தினால் பெருமளவு பணம் கோத்தபாய, பசில் மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு தரகு பணமாக செலுத்தப்பட்டது.

இவ்வாறான பணத்தினை இலகுவாக கொண்டு செல்லவும் கை மாற்றவுமே 2000, 5000 நாணயத் தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 2000, 5000 நாணயத் தாள்கள் அடங்கிய கென்டையனர் ஒன்று அலரி மாளிகைக்குள் கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்து.

அந்த வாகனத்தை கைது செய்து செய்த சமகால அரசாங்கம் நிதி மோசடி பிரிவில் வைத்து விசாரணை செய்த போது இந்த தகவல்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE