2015ஆம் ஆண்டின் தெற்கு அதிவேகப் பாதை மற்றும் கட்டுநாயக்க அதிவேகப் பாதை ஆகியவற்றில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் அது சம்பந்தமான அறிக்கையை இலங்கை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, தெற்கு அதிவேகப் பாதையில் மாத்திரம் 3 பாரிய விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தெற்கு அதிவேகப் பாதையில் இடம்பெற்ற விபத்து சம்பவங்களில் 55 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருப்பதோடு, கட்டுநாயக்க அதிவேகப் பாதையில் 07 பேர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தெற்கு அதிவேகப் பாதையில் அதி வேகத்துடன் வாகனங்களை செலுத்திய மற்றும் ஏனைய குற்றங்கள் தொடர்பாக 32,263 வழக்குகளும், கட்டுநாயக்க அதிவேகப் பாதையில் 18,423 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.