யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வீரசிங்க பத்திரணலாகே விமலசேன மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஆனந்த ராஜகருணா ஆகிய இருவரும் இரகசிய பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர். பிரபல்யமான கோடீஸ்வரர் வர்த்தகரான பெர்னாட் ஜயத்ன என்பவர் பியகம விலேஜில் 2012ஆம் ஆண்டு வெட்டிக்கொலைச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான தகவல்களை மறைத்து. அக்கொலைக்கு உறுதுணையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.