யுத்த்தால் நாம் இழந்த உயிர்கள் போதும் இனி ஒரு உயிர்கூட அழிக்கப்படக் கூடாது. பாடசலை மாணவியின் கொலை செய்தியில் அமைச்சர் பா. டெனிஸ்வரன்
எமது தமிழ் மக்கள் யுத்தத்தினால் கொல்லப்பட்ட பின்பு தற்போது ஒரு சுமுகமான சு10ழலில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான வேளையில் வாள்வெட்டுக்களும, கொள்ளைகளும், கொலைகளும், பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துள்ளமை மிகவும் வேதனையளிக்கின்ற விடயமாகும். அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்திலே பாலியல் பலாத்காரங்களும் கொலைகளும் அதிகரித்துள்ளது. குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் பொலிசாரும்; பொதுமக்களும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
யாழ் மாவட்டத்திலும் சரி ஏனைய மாவட்டங்களிலும் தற்போது போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளமையும் கொலைகள் கொள்ளைகளுக்கு காரணமாக அமைகின்றன. இவ்விடயத்தில் பொலிசாருடன் இணைந்து எமது சமூக அமைப்புக்களும் சிவில் குழக்களும் இணைந்து குற்றவாளிகளையும் அதற்கு உடந்தையாக உள்ளவர்களையும் இனம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி அதிகூடிய தண்டனையை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்
கடந்த காலங்களில் பல குற்றவாளிகள் ஏதோ ஒரு வகையில் தண்டனையில் இருந்து தப்பி விடுகின்றனர். இதனால் குற்றம் செய்பவர்களுக்கு பயம் அற்று விட்டது. இனிவரும் காலங்களில் குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக் கொடுக்க சட்டத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும் குற்றவாளிகளை காப்பாற்றும் முனைப்புடன் செயற்பட வேண்டாம். அதிகபட்ச தண்டனைகளை வழங்குவதன் ஊடாகவே சமூகத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
கடந்த புதன் கிழமை புங்குடுதீவில் கூட்டு வன்புனர்வின் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியின் கொலை தொடர்பாக அக்குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அதிக பட்ச தண்டனையை பெற்றுக் கொடுக்க பொலிஸார் தீவிரமாக செயற்பட வேண்டும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.