சிவகார்த்திகேயன் சூரியை கலாய்த்த இமான்
சமீப காலமாக சிவகார்த்திகேயன், தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடல் பாடி வருகிறார். ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ படத்தில் இமான் இசையில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்…’ என்ற பாடலை பாடினார். அதுபோல் ‘மான் கராத்தே’ படத்தில் அனிருத் இசையில் ‘ராயபுரம் பீட்டர்…’ என்ற பாடலை பாடினார். அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘காக்கி சட்டை’ படத்தில் ‘ஐ அம் சோ கூல்…’ என்ற பாடலை பாடினார்.
சிவகார்த்திகேயன் பாடிய அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி வரும் நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரஜினி முருகன்’ படத்திலும் இவர் பாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படத்தின் இசையமைப்பாளர் இமான், சிவகார்த்திகேயனை பாடவிடாமல் ஒரு பாட்டிற்கு முதலில் தொடங்கும் வசனத்தை மட்டுமே பேச சொல்லி கொடுத்திருக்கிறார்.
தற்போது ‘ரஜினி முருகன்’ படத்தில் இடம் பெறும் ‘என்னம்மா இப்படி பண்றீங்களம்மா…’ என்ற பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பாட்டு பாட வேண்டும் என்று ஆர்வத்துடன் வரும் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியை பாட விடாமல் பாட்டிற்கு வசனம் மட்டும் பேசினால் போதும் என்று கூறி கலாய்க்கிறார். மேலும் அந்தப் முழுப் பாடலையும் இமானே பாடியிருக்கிறார்.
இந்த மேக்கிங் வீடியோவில் படத்தின் புரமோஷனுக்காக, பாட்டின் முதல் வரியை சினிமா பிரபலங்களான இசையமைப்பாளர் அனிருத், காமெடி நடிகர்கள் சதீஷ், நான் கடவுள் ராஜேந்திரன், நடிகர்கள் பாபி சிம்ஹா, விமல், சமுத்திரகனி, இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாடியுள்ளார்கள்.