தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடாக வந்தவர்தான் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள். தங்களிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுகின்றார்கள். அல்லது பணம் வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிடம் கலந்தாலோசித்துவிட்டு பகிரங்கமாக இவ்வாறான கருத்துக்களை கூறியிருக்கலாமே என வினவியதற்கு,
என்னைப்பொறுத்தவரையில் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் பணத்தைப் பெற்றுக்கொண்டும் ஒருசில கருமங்களைச் செய்திருக்கலாம். நான் எந்தவொரு பணத்தினையும் அவ்வாறு பெறவில்லை. எமது சக பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கருமங்களின் அடிப்படையில் அரசிடமிருந்து பணம் பெற்றிருக்கலாம். அவ்வாறு அந்தப்பணத்தில் அவர்கள் மோசடிகள் செய்திருந்தால் அல்லது அந்த கருமங்களை சரிவரச்செய்திருந்தால் அதனை எவ்வாறு செய்தார்கள் என்பதை அவர்கள் வெளிப்படையாகக் கூறவேண்டும். கூறியிருப்பார்கள்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடாக வந்தவர்தான் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள். தங்களிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுகின்றார்கள். அல்லது பணம் வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிடம் கலந்தாலோசித்துவிட்டு பகிரங்கமாக இவ்வாறான கருத்துக்களை கூறியிருக்கலாமே என வினவியதற்கு, அதற்கு பதிலளிக்கையில், அவர் எங்கிருந்தும் வந்திருக்கலாம். அது வேறுவிடயம். இது சம்பந்தமாக நான் உங்களது கேள்விகளுக்கு பதில் வழங்கமுடியாது. விக்னேஸ்வரன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊழல்மோசடிகளில் ஈடுபட்டார்கள் எனக் குறிப்பிடவில்லை. அவர்கள் பணம் பெற்றுக்கொண்டார்கள் என்றே கூறினார். அபிவிருத்தி வேலைகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுக்கொள்வது அவர்களுடைய உரித்தாகும். அவர்களுடைய கடமையும் கூட. அவ்வாறு அவர்கள் அந்தப் பணத்தில் மோசடிகளில் ஈடுபட்டிருந்தால் அந்த விடயம் தொடர்பாக பதில் வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.