தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று இன்று (17.08.2015) காலை தனது வாக்கைச் செலுத்தினார்.
முன்னதாக குருக்களிடமும், குருமுதல்வரிடமும் ஆசி பெற்றார்.
வாக்கைச் செலுத்திவிட்டு அவர் கருத்து தெரிவிக்கையில், ஜனநாயக நாட்டில் வாக்காளர்களின் ஆயுதமே வாக்குச்சீட்டு. அதனை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். முதலில் அனைவரும் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும். என்றார்.