41ஆவது தேசிய விளையாட்டு விழாவின், கபடி சுற்றுப்போட்டிகள் மன்னார் மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது. இன் நிகழ்வின் இறுதிப் போட்டிகள் 30-11-2015 திங்கள் காலை 8:30 மணியளவில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். அத்தோடு விளையாட்டு அமைச்சின் பிரதி செயலாளர் திருமதி.எம்.ஆர்.நதிகா தமையந்தி அவர்களும் வடக்கு கல்வி அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.ரவீந்திரன் அவர்களும் மன்னார் அரச அதிபர் எம்.வை.எம்.தேசப்பிரிய அவர்களும் மேலதிக அரச அதிபர், கல்விப்பணிப்பாளர் மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இவ் இறுதிப்போட்டியில் பெண்கள் பிரிவில் மேல்மாகாணமும் ஆண்கள் பிரிவில் கிழக்கு மாகாணமும் தேசிய சாம்பியனாக தெரிவுசெயயப்பட்டது, இவர்களுக்கான தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதள்களை அமைச்சர் டெனிஸ்வரன் அவர்கள் வழங்கி கௌரவித்தார்…