தென் பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதற்கான எதிர்காலத் திட்டமிடல்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது.
காலி கொக்கலை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலை தென்பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க ஏற்பாடு செய்திருந்தார்.
கதிர்காமத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் ரணில் விக்கிரமசிங்க இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தார்.
இதன் போது காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அமைச்சர்களான மங்கள சமரவீர, வஜிர அபேவர்த்தன, கயந்த கருணாதிலக, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் சில்வா, இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி, லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.