வெகு நாட்களுக்கு பிறகு ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அவதாரம் எடுத்துள்ள அரவிந்த்சாமி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அவர் நடிக்கலாம் என கூறப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் ஜெயம் ரவியோடு ஒரு புதிய படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபுதேவா தயாரிப்பில், ரோமியோ ஜூலியட் புகழ் இயக்குனர் லக்ஷ்மன் இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். அந்த படத்தில் தான் அரவிந்த்சாமியை வில்லனாக நடிக்க கேட்டுள்ளனர்.
அவர் ஒப்புக்கொண்டால் தனி ஒருவன் கூட்டணி மீண்டும் இணைவது உறுதி.