பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கும் இடையில் லண்டனில் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 22ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க லண்டன் சென்றிருந்தார்.
அதேபோன்று தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 18ம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க லண்டன் சென்றிருந்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள், உத்தேச அரசியல் அமைப்பு திருத்தங்கள், கடந்த மஹிந்த ஆட்சிக் கால ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளின் நிலைமை, எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.