5வது நாளாகவும் அட்டன்-கொழும்பு-நுவரெலிய மார்க்க போக்குவரத்து ஸ்தம்பிதம்

232

சம்பளவுயர்வு கோரிய போராட்டம் மலையகம் தழுவிய ரீதியில் 5வது நாளாகவும் தொடர்கின்றது. ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பைக் கோரி அட்டன் கொட்டகலை நுவரெலியா நகரப் பகுதிகளில் தொழிலாளர்கள் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அட்டன் டிக்கோயா மற்றும் செனன் பிரதேச தொழிலாளர்கள் மல்லியப்பு சந்திவரை ஊர்வலமாக வந்து கொழுப்பு அட்டன் நுவரெலிய வீதியின் மல்லியப்பு சந்தியில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் பல மணித்தியாலங்கள் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது. இந்நிலையில் கொட்டகலை நகர சந்தியிலும், கொட்டகலை பிரதேச தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதையை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

தகவலும் படங்களும் :- நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

unnamed-1

unnamed-2

unnamed-3

unnamed-4

unnamed-5

unnamed-6

unnamed-7

unnamed-8

unnamed-9

unnamed

SHARE