5வயது சிறுமி துஸ்பிரயோகிக்கப்பட்டே கொலை

230

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன கொட்டதெனியாவைச் சேர்ந்த 5 வயது குழந்தை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக நீதவான் விசாரணையின் போதே பொலிஸார் இத்தகவலைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் நீதவான் விசாரணை மற்றும் இன்று காலை நீர்கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் அடிப்படையில் குழந்தை கொல்லப்பட்டிருப்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

இதுவரை இவ்விடயம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE