50 ஆவது படத்தில் காலடி எடுத்து வைக்கும் : த்ரிஷா  

350

தமிழ் சினி­மாவில் பத்­தாண்­டு­களைக் கடந்து நடை­போடும் தற்­காலக் கதா­நா­ய­கி­யரில் ஒருவர் த்ரிஷா. அவர் திரை­யு­ல­குக்கு வந்து 12 ஆண்­டுகள் முடிந்­து­விட்­டன. ஜெயம்­ர­வி­யுடன் மூன்­றா­வது முறை­யாக த்ரிஷா ஜோடி சேர்ந்­தி­ருக்கும் ‘சக­ல­கலா வல்­லவன்’ த்ரிஷா­வுக்கு 48 ஆவது படம். இப்­போதும் இளமைத் துடிப்­புடன் நடித்­துக்­கொண்­டி­ருக்கும் த்ரிஷா வழங்­கிய நேர்­காணல்.

உங்­க­ளு­டைய 50 ஆவது படம் எப்­படி அமைய வேண்டும் என நினைக்­கி­றீர்கள்?

என்­னு­டைய 50 ஆவது படம் ‘தூங்­கா­வனம்’ அல்­லது ‘அரண்­மனை 2’ ஆகிய படங்­களில் ஒன்­றாக இருக்கும். எது என்­பது எனக்கு உண்­மையில் தெரி­யாது. இரண்டு படப்­பி­டிப்­பு­க­ளுமே மிகவும் வேக­மாக நடந்து வரு­கின்­றன. ‘தூங்­கா­வனம்’ படத்தில் உள்ள பாத்­திரம் போல இது­வரை நான் பண்­ணி­யதே இல்லை. வேறு ஒரு வித்­தி­யா­ச­மான கெட்­டப்பில் த்ரிஷாவைப் பார்க்­கலாம்.

‘அரண்­மனை-2’ என்­னு­டைய முதல் பேய் கொமெடி படம். ஒரு இடத்தில் கூட போர் அடிக்­காத மாதிரி படம் நன்­றாக வந்­தி­ருக்­கி­றது. சுந்தர்.சி ஒவ்­வொரு படம் ஆரம்­பிக்­கும்­போதும், இந்தப் படம் நாம் இணைந்து பண்­ண­லாமா என்று கேட்­கும்­போ­தெல்லாம் பல்­வேறு கார­ணங்­களால் நடிக்க முடி­யாமல் போய் இருக்­கி­றது. இறு­தி­யாக இந்தப் படம் மூல­மாக இணைந்­தி­ருக்­கிறோம்.

தொடர்ந்து படங்கள் ஒப்­பந்­த­மா­வதன் ரக­சியம் என்ன?

திரை­யு­ல­கிலும் நிறைய பேர் ‘என்ன திடீர்னு நிறைய படங்கள் பண்­ணு­றீங்க?’ என்று கேட்­கி­றார்கள். எந்த நடி­கையை எடுத்­துக்­கொண்­டாலும் 6 மாதம் இடை­வெளி விழும். அப்­பு­ற­மாக தொடர் படங்கள் வரும். எனக்குத் தொடர்ந்து பெரிய நடி­கர்கள், இயக்­கு­நர்கள் படங்கள் கிடைப்­பது அதிர்ஷ்­டம்தான் என்று சொல்ல வேண்டும்.

நீங்கள் இது­வரை நடித்த படங்­களுள் உங்­களால் மறக்க முடி­யாத படம் எது? ஏன்?

என்னைப் பொறுத்­த­வரை நான் பண்­ணிய 48 படங்­க­ளுமே சிறந்த படங்­கள்தான். ஒரு படத்தை மட்டும் தனி­யாக நான் சொல்ல முடி­யாது. என்­னு­டைய ஒவ்­வொரு படத்­தையும் நான் தேர்வு செய்ய ஒரு காரணம் இருக்­கி­றது. பெரிய நடிகர் மற்றும் இயக்­குநர், சின்ன நடிகர் மற்றும் இயக்­குநர் என்று எல்லாம் நான் பார்ப்­பதே இல்லை. கதை நன்­றாக இருந்தால் போதும் யாரு­டனும் நடிக்கத் தயா­ரா­கி­வி­டுவேன்.

SHARE