உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரான மெஸ்ஸி 500 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.கோபா டெல்ரே கால்பந்து தொடரின் அரையிறுதி முதல் லெக் ஆட்டம் நேற்று கேம்ப் நியூ மைமானத்தில் நடந்தது.
இந்த ஆட்டத்தில் பார்சிலோனா 7-0 என்ற கோல் கணக்கில் வாலென்சியா அணியை வீழ்த்தியது. பார்சிலேனோ அணியில் இருந்த மெஸ்ஸி மூன்று கோல்களை அடித்தார், இதில் ஒன்று மெஸ்ஸியின் 500வது கோலாகும். |