சமீபத்தில் சாப்பாட்டை சிந்தியதற்காக 6 வயது சிறுமியை பாட்டி கொடூரமாக அடிக்கும் வீடியோ வைரலானது.
மலேசியாவின் புக்சோவ் பகுதியில் இச்சம்பவம் நடந்தது தெரியவந்ததையடுத்து குறித்த மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
6 வயது சிறுமியும் கோடீஸ்வர தம்பதி ஒருவரால் தத்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மூதாட்டியிடம் விசாரணை நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.
விசாரணையில், வீட்டில் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார், கடன் பிரச்சனையின் காரணமாக திருடியதாக கூறியுள்ளார்.
இதன்போது சுற்றியிருக்கும் நபர்கள் மூதாட்டியை அடிப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.