ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், 73 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளனர்.தன்னார்வ அடிப்படையில் நாடு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு உதவிகளை வழங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தொடர்ந்தும் அகதிகளாக வாழ விரும்பாதவர்கள் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். யுத்தம் நிறைவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவின் பல்வேறு அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2002ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தன்னார்வ அடிப்படையில் நாடு திரும்ப விரும்பிய 12500 இலங்கை அகதிகளுக்கு உதவிகளை வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.