சுப்புரமணியம் வித்தியாலய அதிபர் இ.செல்வநாயகம் தலைமையில் 27.09.2016 அன்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி கலையரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் சிறுவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டுவரும் முகமாகவும் இக் கலை இலக்கிய விழா இடம்பெற்றது.
இதில் இப்பாடசாலையில் படித்த மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும், 5ஆம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்புக்களும் இப் பாடசாலையிலிருந்து மாகாணம், தேசியமட்டப் போட்டிகளில் வெற்றியிட்டிய மாணவர்களுக்கும் பரிசில்களும், கௌரவிப்புக்களும் இடம் பெற்றுள்ளது. இதற்கு பிரதம ரீதியாக முல்லைத்தீவு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி உ.முனீஸ்வரன் அவர்களும், முல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட வைத்திய அதிகாரி ப.தயானந்த ரூபன் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
படங்களும் தகவலும்:- ந.கலைச்செல்வன், முல்லைத்தீவு.