80, 90களில் நடித்த சில நடிகர்களை நம்மால் மறக்கவே முடியாது, அப்படி கருத்தம்மா படத்தின் மூலம் பிரபலமானவர் தான் ராஜா.
கடலோர கவிதைகள், வேதம் புதிது உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தார்.
பின் மார்க்கெட் குறைய துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தமிழில் கண்ணுக்கு கண்ணாக மற்றும் ஆதித்யா வர்மாவில் கடைசியாக நடித்திருந்தார். பின்னர் எந்த படங்களில் அவர் நடித்தது இல்லை.
லேட்டஸ்ட் போட்டோ
நீண்ட வருடங்களாக கேமரா பக்கம் காணாமல் போன ராஜா அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவரைப் பார்த்த ரசிகர்கள் அட 90களில் பார்த்த ராஜாவா இவர் என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.