அதிபயங்கரமான இரகசிய வதைமுகாம்!! தமிழர்கள் கடும் சித்திரவதை

304

 

kolai2அனுராதபுரத்தில் அதிபயங்கரமான இரகசிய வதைமுகாம்!! தமிழர்கள் கடும் சித்திரவதை கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட பலர் அனுராதபுர பிரதேசத்தில் இரகசியமாக இயங்கும் வதைமுகாமொன்றில் இருப்பதாக கையளிக்கப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டோரைக் கண்டறியும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த இரகசிய முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு மோசமான முறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாக குறித்த சங்கத்தின் வடக்குக் கிழக்கு மாகாணத்துக்கான தலைவர் நாகேந்திரன் ஆஷா இன்று கொழும்பில் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோரின் உறவினர்கள் மற்றும் காணாமல் போனோரின் உரிமைகளுக்காக போராடிவரும் பொது அமைப்புக்கள் இணைந்து இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த நிலையிலேயே ஆஷா இந்த அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், தமது உறவுகளைக் கடத்திய கடற்படையினரை ஆதாரத்துடன் நாம் அடையாளப்படுத்தியும்கூட அரசாங்கமோ, பாதுகாப்பு அமைச்சோ இதுவரையும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

தாம் கேள்வியுற்ற இந்த இரகசிய முகாம் தொடர்பில் முறையிடுவதால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை என்பதாலேயே ஊடகங்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவிப்பதாக ஆஷா மேலும் தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு எதிரான அல்லது இனவாதத்தை தூண்டிவிடும் செய்திகள் அதி வேகமாக தென்னிலங்கையில் பரப்பப்பட்டு வருகின்றது. அதற்கான செயற்பாடுகள் அன்றாடம் இடம் பெற்றுகொண்டே இருக்கின்றது.

ஆவா குழு என்பது விடுதலைப்புலிகளின் தலைமையில் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது பின்னர் புதிதாக பிரபாகரன் படை என ஒன்று உருவாக்கப்பட்டது இவை அனைத்துமே நாட்டில் பதற்ற நிலையை ஏற்படுத்த முயலும் சதியாளர்களினால் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

வடக்கில் இராணுவ அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்பட்டு பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்ற வேளையில் அதனைத் தொடர்ந்து, மலேசியாவில் சிங்கள இளைஞர்கள் மீது வாள்வெட்டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறி இரத்த வெள்ளத்தில் இளைஞர்கள் கிடக்கும் புகைப்படங்கள் சிலவற்றினையும் மஹிந்த ஆரதவாளர்கள் மூலமாக பரப்பப்பட்டு வருகின்றது.

இந்த செயல் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இளைஞர்களை தூண்டிவிடும் செயலாகவே காணப்படுகின்றது. இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை எதுவும் தெரியாத நிலையில் பொய்யான தகவல்களை பரப்பும் போது அது இனவாதத்தினை உண்டுபண்ணும் செயலாகவே நோக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான பொய்களை பரப்பி நாட்டில் குழப்பத்தில் ஏற்படுத்த முயலும் செயலில் மஹிந்த தரப்பின் ஆதரவாளர்கள் செயற்பட்டு வருகின்றார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பதிவினையும் மஹிந்த ஆதரவான ஒருவரே பரப்பிவருகின்றார்.

உண்மைகள் அற்ற அதே நேரம் உண்மைத்தன்மை அறியப்படாத போது சிங்களவர்கள் மீது தாக்குதல் என்ற கருத்து கூறப்படும் போது அது எந்தவகையிலும் வரவேற்கத்தக்கதல்ல. அதன் விளைவு பாரதூரமானதாக அமையும்.

ஏற்கனவே மலேசியாவில் விடுதலைப்புலிகள் இருப்பதாக கருத்துகள் கூறப்பட்டு வரும் வேளையில் இவ்வாறானதொரு தகவலை பரப்புவதன் மூலம் நாட்டில் இனவாதம் தூண்டப்படுவதோடு தமிழர்களுக்கு எதிராக சிங்கள மக்கள் ஒன்று திரளக் கூடிய சாத்தியக் கூறுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

இனவாதக் கருத்துகளை பரப்புகின்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆரம்பத்திலேயே இவை தடுக்கப்படாவிட்டால் சிங்கள மக்கள் தமிழர்கள் எதிராக திசைதிரும்பிவிடுவதோடு, கலவரம் ஏற்படும் அபாயமும் உண்டு எனவும் தென்னிலங்கை அவதானிகள் கூறிவருகின்றனர்.

நல்லிணக்க நாடு என்ற வகையில் இவ்வாறான செயற்பாடுகள் ஆரம்பத்திலேயே தடுக்கப்படாவிட்டால் மீண்டும் இலங்கையில் பாரியளவு உயிர்ச்சேதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்றே கூறப்படுகின்றது.

SHARE