இயக்குனர் ஷங்கர் இந்திய சினிமாவின் நம்பர் 1 இயக்குனர். இவர் படங்கள் என்றாலே பிரமாண்டத்தின் உச்சமாக இருக்கும்.
தற்போது இவர் 2.0 படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் இவரின் அறிமுகமப்படமான ஜெண்டில் மேன் படத்திற்கு முன்பே இவர் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக இருந்ததாம்.
அப்படம் முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அழுத்தமான கதையாம், ஆனால், தயாரிப்பாளர் கேட்டதற்கு இனங்க ஷங்கர் ஜெண்டில் மேன் படத்தை தொடங்கியுள்ளார்.
ஒரு வேளை நான் மட்டும் அந்த படத்தை தொடங்கியிருந்தால் இன்று என்னை யாரும் பிரமாண்ட இயக்குனர் என்று அழைத்திருக்கவே மாட்டார்கள் என பல பேட்டிகளில் ஷங்கர் கூறியுள்ளார்.