விஜய் இரண்டாவது முறையாக அட்லீயுடன் இணைந்து புதிய படம் நடித்து வருகிறார்.
காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் இப்படத்தில் நடிக்க ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
படப்பிடிப்புகள் ஒருபக்கம் நடந்துவர பட வியாபாரங்கள் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் கேரள மாநில உரிமையை புலி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிபுதமீன்ஸ் அவர்களின் தமீன் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
புலி படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை இந்த படத்தின் மூலம் ஈடுகட்டிவிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.