சமீப காலமாக சின்னத்திரை நடிகர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் நடிகை மைனா நந்தினியின் கணவர் தற்கொலை செய் கொண்ட நிலையில், இப்போது முன்னணி தமிழ் ரிவி ஒன்றில் ஒளிப்பரப்பாகி வந்த சுமங்கலி தொடரில் முதன்னை ரோலில் நடித்து வந்த நடிகர் பிரதீப் தற்கொலை செய்து கொண்டார்.
ஐதராபாத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியத நிலையில் தொடர்ந்து பொலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதுப்பற்றி சுமங்கலி தொடர் நடிகர்களின் வட்டாரத்தில் விசாரித்தபோது, அவர்களே இந்த விடயத்தை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இவரது தற்கொலைக்கான காரணம் குடும்ப தகராறே என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.