அமெரிக்காவில் குடியேறவுள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள்!

180

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில்க குடியேறுவதற்கான இணக்கப்பாடு மீண்டும் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கமன்டேர்ன்புல்லுக்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போதே, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகளை அமெரிக்காவில் குடியேறுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் முன்னதாக நிராகரிக்கப்பட்டஅகதிகளுக்கான ஒப்பந்தத்தை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒபாமா அரசாங்கத்தினால், அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இதற்கான ஒப்பந்தம் முன்னதாக செய்து கொள்ளப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் மானஸ் மற்றும் நவுறு தீவுகளின் முகாம்களில் உள்ள 1200அகதிகளை அமெரிக்காவில் குடியேற்றுவதற்கு இணக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE