நடிகர் அக்ஷய் குமார் செய்த பிரம்மிக்க வைக்கும் செயல்

241

ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் நடிகர் அக்ஷய் குமார். இவர் அண்மையில் பேட் மேன் படம் மூலம் பெண்களுக்கான சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும் தன் விருப்பத்தின் அடிப்படையில் மக்களுக்கு பல பயனுள்ள உதவிகளை செய்து வருகிறார். அண்மையில் அவர் விவசாயிகளுக்காக குளம் அமைத்து கொடுத்தார். கடந்த 2016 ல் அவர் நடிப்பில் ருஸ்டம் படம் வெளியானது.

இதில் அவர் கப்பற்படை அதிகாரியாக நடித்திருந்தார். அவருக்காக பிரத்தியேக உடைகள் தயாரிக்கப்பட்டது. தனக்கு மிகவும் பிடித்த இந்த உடைகளை அவர் ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை விலங்குகள் பாதுகாப்பிற்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளாராம்.

SHARE