மூன்று மடங்கு விற்றமின் சி அதிகம் உள்ள சிவப்பு குடைமிளகாய்

175

பெரும்பாலும் சமையலில் பயன்படுத்துவது பச்சை வண்ண குடமிளகாயைத் தான். அதனால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன என்று பார்க்கலாம்.

குடைமிளகாயில் குறைந்த அளவே கலோரியும் கொழுப்பும் உள்ளது. இதை சாப்பிடுவதால் எடை அதிகரிக்காது.

குடமிளகாயில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை புற்று நோய் வராமல் தடுக்கிறது.

தினமும் குடமிளகாயை உணவில் சேர்த்துக்கொண்டால் சிறுநீர்ப்பை, கணையம், கருப்பை வாய், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் ஆகியவற்றைத் தடுக்கலாம்.

குடமிளகாயில் அழற்சி எதிர்ப்பு தன்மை இருப்பதால் உடல் வலிக்கு மிகவும் ஏற்றது. எலும்பு இணைப்புகளில், மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும், வலியையும் குறைக்கிறது.

குடமிளகாய் செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இது வாய்வு தொல்லையை போக்கி மலச்சிக்கலை தடுக்கிறது.

இதய நாளங்களில் அடைப்பு ஏற்படும் போது ரத்த ஓட்டம் தடைபடுகிறது. குடமிளகாயில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. இதில் கெட்ட கொழுப்பு இல்லை.

சிகப்பு குடமிளகாயில் மூன்று மடங்கு வைட்டமின் சி அதிகம். இது உடைந்த திசுக்களை சரி செய்யவும், ஆரோக்கியமான பிரசவ காலத்திற்கும், கருவில் உள்ள குழந்தையின் உறுப்புகளின் சரியான வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாதது.

குடமிளகாய் ரத்தத்தை நீர்க்க செய்து விடும். இது அறுவை சிகிச்சையின் போது பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.

குடமிளகாய் குழந்தைகளின் மிருதுவான சருமம் மீது பட்டால் எரிச்சல், தடிப்பு, சருமம் சிவப்பாதல், அலர்ஜி போன்றவை ஏற்படும். குழந்தைகளுக்கு குடமிளகாய் சேர்க்காமல் இருப்பதே நல்லது.

SHARE