2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிக்கான வீரர்களின் ஏலம் நடைபெறும் டோனியை ஏலத்தில் எடுக்காதது வருத்தமாக இருக்கிறது என பஞ்சாப் அணியின் உரிமையாளரும், நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ப்ரீத்தி கூறியதாவது, நான் டோனியின் தீவிர ரசிகை கிடையாது, ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் அவரது ஆட்டத்தை பார்த்து மெய்சிலிர்த்தேன்.
இந்திய அணித்தலைவர்களின் சிறந்த அணித்தலைவர் ஆவார். அவரின் வயது குறித்து அவ்வப்போது விமர்சனங்கள் எழுகின்றன, ஆனால் தனது வயது பிரச்சனையால் அவரால் விளையாட இயலாது என்பதை அவர் நிரூபிக்க வேண்டிய அவசியம் அவருக்கு கிடையாது.
ஏனெனில், களத்தில் தான் ஒரு சிறந்த வீரர் என்பதை ஒவ்வொரு போட்டியின் போதும் நிரூபிக்கிறார் என கூறியுள்ளார்.