(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்)
மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் தனி வீட்டுத்திட்டமொன்று ஏற்படுத்தப்படவுள்ளது.



15 தனி வீடுகளை கொண்ட இந்த வீடமைப்புத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 31.05.2018, இடம்பெற்றது. இந் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் , மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், பிரதேச சபை உறுப்பினர்களான வேலு சிவானந்தன், சிவநேசன், சுதாகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.