
தூத்துக்குடி போராட்டம் குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு, பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
நேற்று தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையாக மாற சமூக விரோதிகள் போராட்டக்காரர்களாக ஊடுருவியதே காரணம் என்றும் எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் தமிழ்நாடே சுடுகாடாகும் என்றும் பேசினார்.
இந்த நிலையில் ரஜினியின் பேச்சை திரித்து போராட்டம் குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஒருசில கட்சியின் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினிக்கு சமூக வலைத்தளங்களில் பயங்கர எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதால் அவரது வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு பாதுகாப்பிற்காக போலீஸ் வந்ததாக கூறப்படுகிறது. தூத்துகுடியில் நேற்று ரஜினிக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை பொறுத்து கொள்ள முடியாதவர்கள் ரஜினியின் பேச்சை திரித்து எதிர்மறை கருத்துக்களை பரப்பி வருவதாக அவரது ரசிகர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.