உடற்பயிற்சி முடித்த கையோடு உண்ணக் கூடாத‌ உணவுகள்

163

நாம் தினமும் உடற்பயிற்சியை மேற்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்து க்கொள்வதற்காக முயற்சிக்கிறோம். நம் உடலுக்கு

சக்தியை கொடுக்கும் கிளைகோஜென் என்னும் வேதிப்பொருள் உடற்பயிற்சியின்போது வெளியேறுகிறது. அதுமட்டுமல்லாமல் நம் தசைகளும் சேதமடைந்து விடுகின்றன, இதனால் நாம் உடற்ப யிற்சியின் மூலம் இழந்த சக்தியினை, புரதச்சத்துமற்றும் கார்போ ஹைட்ரேட் போன்றவற்றின் மூலம் பெறலாம். ஆனால் உடற்ப யிற்சிக்கு பின்னர் சில வகை உணவுகளை நாம் தவிர்ப்பது நல்லது.

மாமிசம்

உடற்பயிற்சிக்கு பின்னர் கொழுப்பு வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது, மாமிசத்தில் கொழுப்பு அதிகம் இருப்பதால் அதனை நாம் உட்கொள்ளும் போது இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பிரட்

பிரட்டில் குளூட்டென் மற்றும் சர்க்கரை அதிகம் இருப்பதால் நாம் உடற்பயிற்சி மேற்கொண்ட பின்னர் பிரட்டை சாப்பிடும் போது உடலில் சர்க்கரைச்சத்து வேகமாக ஏற வாய்ப்புள்ளது.

நார்ச்சத்து உணவுகள்

பொதுவாக நார்ச்சத்து உள்ள உணவுகள் உடலுக்கு ஆரோக்கி யம்தரும், ஆனால் உடற்பயிற்சி முடித்தபின்னர் நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே அதற்கு பதிலாக ஆம்லெட், கீரை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

தயிர், வெண்ணெய்

உடற்பயிற்சிக்கு பின்னர் நம் உடலில் இரத்த ஓட்டமானது வயிற்று க்குள் செல்லாமல் வெளியேதான் இருக்கும். எனவே அந்நேரங்க ளில் தயிர், வெண்ணெய் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும், மேலும் கொழுப்புச் சத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பழச்சாறு

பழங்கள் உடலுக்கு நல்லதாக இருந்தாலும் உடற்பயிற்சி செய்த பின்னர் ஜூஸ் உடனே சாப்பிடக்கூடாது. இதில் உள்ள சர்க்கரை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிக ரித்துவிடும். ஒருவேளை ஏதாவது குடிக்க வேண்டுமென்று தோன்றினால் தண்ணீர் அல்லது ஐஸ் துண்டுகள் போட்ட மூலிகை டீ அல்லது இளநீரை குடிக்கலாம், இது மிகவும் ஆரோக்கியமானது.

SHARE