முதலமைச்சர் விக்னேஸ்வரன் கருணா போன்ற ஒரு துரோகி வைத்திய கலாநிதி சிவமோகன்(MP) ஆதங்கப் பேச்சு

202

தலைவர் வே. பிரபாகரன் காலத்தில் கருனாம்மான்   ஒரு காட்டிக்கொடுத்தவனாக உருவாகினானோ !!! அதனைப்போல் வடமாகணசபையைக் காட்டிக்கொடுத்தவராக எமது விக்னேஸ்வரன் ஐயா பதிவு செய்யப்படுவார்

பாடசாலை அதிபர் அவர்களுக்கும் இந்த நிகழ்வை தலைமையேற்றி நடத்தி கொண்டு இருக்கும்
விமலதாசன் அவர்களே கெளரவ பாராளுமன்ற உறுப்பினரான ஷாந்தி ஸ்ரீகந்தராஜா
அவர்களுக்கும் மற்றும் இந்த நிகழ்வுக்கு அதி அச்சாணியாக இருக்கும்ந மயூரன் அவர்களே
லக்கிஸ் அவர்களே மற்றும் எமது வற்றாப்பளை மூத்த தலைவரும் குகதாசன் ஐயா அவர்களே
பிரதேச உபதலைவர் தவிஸ்னர் ரவீந்திரன் அவர்களே பிரதேச சபை சுபாஷ்கரன் அவர்களே
முன்னைய அதிபர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் வணக்கம்
இன்று ஒரு முக்கிய நாளில் நிற்கிறோம். முடியும் என்று நினைத்தால் முடியாது எதுவும் இல்லை .
அந்த அடிப்படையில் இன்று லண்டன் வாழ் சமுதாயத்தில் இருந்தது எமது கொடையாளிகள்
இந்த மதிலை கட்டி இருக்கிறார்கள் அந்த தாற்பரியம் என்ன என்பது எமது ஆசிரியர்
சொல்லி இருக்கிறார். அதுமட்டும் இல்லை இப்படியான விடயங்களை நேரடியாக  இந்த
சமூகத்தில் இருந்து சென்றவர்கள் தங்களது பாடசாலைக்கான செய்ய வேண்டும் என்ற
ஊக்கத்துடன் நிற்பது ஒரு  பெரிய விடயம். பல பாடசாலைக்கு இப்படியான அமைப்பு
இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எல்லாவற்றிக்கும் அரசாங்கத்தை நம்பி
இருக்க வேண்டியவராக இருக்கிறார்கள் . மற்றும் கல்வி திளைக்களத்தினை நம்பி
இருக்கிறார்கள் ,இன்று மிக பெரிய சாதனை படைத்தவர்கள் இன்று ஒரு  முயற்சியை தொடக்கி
இருக்கிறார்கள் . எது நிச்சயமாக வெற்றி பெறும். அவர்களுக்கான உழைப்பில் நாங்களும் எமது
பங்கினை செலுத்துவேன் என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்கிறேன். எது உங்களுக்கு
கஷ்டமான முயற்சி அல்ல அனைவரும் சேர்ந்தால் இது இலகுவான முயற்சியே மற்றும் இன்று
நங்கள் தமிழர்களாக ஒற்றுமையாக இருக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். தமிழ் இடத்தில்
ஒற்றுமையை உருக்குலைத்து விட்டால் தமிழ் இனத்தில் இருப்பே உருக்குலைத்து போக்கு
அடிநாதம் இல்லாமல் போய்விடும் என்பது நங்கள் அறிந்த விடயம் அப்படி இருந்தும் இன்றும்
தமிழ் இனத்தின் ஒற்றுமையை இந்த மண்ணில் உருகுலப்பதற்கு பல சக்தி முன்னின்று முயன்று
கொண்டு இருக்கிறார்கள் .
சில செய்திகளை நேற்று பார்த்தேன். தமிழ் மக்கள் பேரவை என்று உங்களால் இன்னுமொரு கட்டி அமைக்க வேண்டும் என்று  கூக்குரல்எழுந்து இருக்கிறது .தமிழ் மக்கள் பேரவை என்று உருவாக்கும் போது அது அரசியல் சார்ந்து அல்ல பொதுமக்களுக்கான ஒரு பொது அமைப்பு என்று தான் கூறப்பட்ட்து . அதே மேடையில் நாக்கு கூசாமல் அரசியலை பற்றி கூறியிருக்கிறார் . மற்றும் கட்சியை பற்றி கூறியிருக்கிறார் . தமிழர்களின் ஒற்றுமையை  பற்றியும் திட்டமிட்டு இருக்கிறார்கள் .இது மிகவும் கவலைக்குரிய    விடயம் . இன்று எமது முதலமைச்சர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கெளரவத்துக்குரிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் இருக்கிறார் . அவர் அப்படியே தான் இருக்க வேண்டும். விக்னேஸ்வரன்ன் ஐயா தமிழ் தேசிய கூட்டமைப்பின்  ஒரு முக்கிய புள்ளியாகவும், முக்கிய உறுப்பினராகவும் இன்றும் இருக்கிறார்கள்
 அவரை சில கூட்டங்கள் ஊருடுவி தமிழர்களின்   ஒற்றுமையை உருக்குலைக்கலாம் என    சிலர் பரிசோதனை  செய்ய முயற்சிக்கின்றார்கள்.
உண்மையில் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் எம்முடைய முதலமைச்சர்  எமது தமிழ் தேசிய கூட்டமைப்பில் கௌரவ  முதலமைசச்ராக நாங்கள் விட்ட வழியில் இருக்க வேண்டும்.
 அப்படி இல்லாமல் உருக்குலைக்கப்பட்டு விட்டால் பண்டார வன்னியன் காலத்தில் காக்கவன்னி எப்படி ஒரு காட்டிக்கொடுத்தவனாக மாறினானோ!! எம்முடைய மேன்மை பொருந்திய தலைவர் வே. பிரபாகரன் காலத்தில் கருனாம்மான்   ஒரு காட்டிக்கொடுத்தவனாக உருவாகினானோ !!! அதனைப்போல் வடமாகணசபையைக் காட்டிக்கொடுத்தவராக எமது விக்னேஸ்வரன் ஐயா பதிவு செய்யப்படுவார்.  அந்த துரோகப்பட்டத்தினை நிச்சயமாக அவர் பெற்றுக்கொள்ளகூடாது என  நான் இவ்விடத்தில் பதிவு செய்கின்றேன்.
இன்று எமது தமிழ் சமூக பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.   அற்ப பணத்திற்காக தமிழ் தேசிய  கூட்டமைப்பினை குற்றம் சாட்டுவதினை  நிறுத்திவிடுவது மிகவும் சிறந்தது.
சொகுசு வார்த்தைகளினை கூறி பாசாங்கு  செய்வதை விட  செல்வதை சொல்லிவிட்டு சாவது மேல் என கௌரவ முதலமைச்சர் ஐயா அவர்கள் கூறி உள்ளார். அது சிறந்தது ஆனால்  நான் சொல்கின்றேன்  நாங்கள் செய்வதை செய்துவிட்டு சாவது தான் மேல் என இவ் இடத்தில் குறிப்பிடுகிறேன் .
SHARE