தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் பாரிய மரம் முறிந்து விழுந்ததில் குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிப்பு

170

தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில், கெட்டபுலா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மரம் மின்சார இணைப்புகள் மீது விழுந்தமையால் மின்சார கம்பங்கள் சேதமடைந்து, மின் கம்பிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

எனினும் அந்த மின்கம்பிகளினூடாக தொடர்ந்தும் மின்சாரம் பாய்வதனால் ஆபத்தான நிலை காணப்படும் போதும் இன்று அதிகாலை வரை மரம் அகற்றப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து இன்று காலை இலங்கை மின்சார சபையினர் அவ்விடத்திற்கு விரைந்து மரங்களை வெட்டி அகற்றியுள்ளதுடன், மின்சார இணைப்பினை சீர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

  

 

  

SHARE