வாழைச்சேனையில் உலக சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

214

மட்டக்களப்பு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையும், வாழைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து மீள்பாவனைக்கு உதவாதவற்றை தவிர்த்துக் கொள்வோம் என்ற எண்ணக்கருவிற்கிணங்க விழிப்புணர்வு பேரணி வாழைச்சேனை பிரதேச சபை முன்பாக ஆரம்பமாகி வாழைச்சேனை சந்தை வரை சென்றது.

மட்டக்களப்பு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர் ஏ.ஜே.எம்.முகீத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிகார சபை உத்தியோகத்தர் எஸ்.தட்சாயினி, வாழைச்சேனை பிரதேச செயலக கரையோர பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.ஏ.பைறூஸ், வாழைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை இந்துக்கல்லூரி சுற்றாடல் முன்னோரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  

  

  

  

இதன்போது பேரணியாக சென்றவர்கள் வாழைச்சேனை வியாபார நிலையங்களுக்கு சென்று கடைகளில் பயன்படுத்தப்படும் பொலித்தீன்களால் ஏற்படும் பாதிப்புக்கள் சம்பந்தமான விழிப்புணர்வு வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும் அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட மீள்பாவனைக்கு உதவாத பொலித்தீன் பாவனையினை வியாபாரிகள் மேற்கொண்டால் உடனடியாக அதனை தடை செய்து, எவ்வாறான பொலித்தீன்களை பயன்படுத்த வேண்டும் என்று கருத்துரை வழங்கப்பட்டது.

SHARE