திருகோணமலை 22ஆம் படைப்பிரிவில் கடமையாற்றி வரும் இராணுவ வீரர் ஒருவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை 40 மில்லி கிராம் ஹெரோயினுடன் நேற்றிரவு கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தொம்பே, நாரம்பொல, மோராகம பகுதியைச் சேர்ந்த 31 வயதான கே.ஜி.ஜானக பிரியதர்ஷன எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
22ஆம் இராணுவ படை முகாமிற்குள் கடமையிலிருந்த இராணுவ வீரர் ஹெரோயின் வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அவரை இராணுவ பொலிஸார் சோதனையிட்ட போது அவரிடமிருந்து 40 மில்லிகிரேம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் அதனையடுத்து திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட இராணுவ வீரரை திருகோணமலை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.