எழுத்தாளர் சௌபா மறைவு

175

மகனை கொலை செய்ததாக விளக்கமறியல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் சௌபா என்கிற சௌந்திரபாண்டியன் மரணமடைந்தார்.

இவர் தன் மகன் விபின் (27) என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக விளக்கமறியல் செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அவர் சிறையில் ரத்த வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அவரை சிறை நிர்வாகம் மதுரை அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்ததையடுத்து. அவர் சிகிச்சை பலனின்றி அவர் இன்று மரணமடைந்தார்.

SHARE