மாத்தறை நகர மத்தியில் அமைந்துள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் கொள்ளையிட வந்த கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பரஸ்பரம் துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், இதில் காயமடைந்த மூன்று பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரழந்துள்ளார். இதனால் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறை நகரில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் கொள்ளையிட 6 பேர் கொண்ட குழு வந்துள்ளது. இதில் இரண்டு பேர் கொள்ளையில் ஈடுபட்டிருந்த நேரத்தில் அருகில் மற்றுமொரு நபர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.
உடனடியாக செயற்பட்ட பொலிஸார் கொள்ளையர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு இரண்டு தரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்துள்ளது.
கொள்ளையில் ஈடுபட வந்த சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த மூன்று பொலிஸார் மற்றும் மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை கொள்ளையர்கள் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இயந்திர துப்பாக்கி என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.