
மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் இன்று வெள்ளிகிழமை இரண்டாவது நாளாக மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்
அரசாங்கத்திடம் இருந்தே அரசியல்வாதிகளிடம் இருந்தே தங்களுக்கு எந்த விதமான சாதகமான பதிலும் கிடைக்காமையினால் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் வேலை தோடும் பட்டதாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்;
அரசாங்கம் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை ஏற்று புள்ளியின் அடிப்படையில் நியமனங்களை வழங்கும் முறையை கைவிட்டு வயதின் அடிப்படையிலும் பட்டம் பெற்ற ஆண்டின் அடிப்படையில் நியமனங்கள் வழங்குவதை உறுதிப்படுத்தும் வரையின் தங்கள் போரட்டம் வௌ;வோறு விதங்களில் தொடர்ச்சியாக இடம் பெறும் எனவும் எனவே அரசாங்கம் எங்கள் போரட்டங்களை தடுப்பதை விடுத்து அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வது பெறுத்தமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்